சு. சுப்பிரமணியன்
Appearance
சு. சுப்பிரமணியன் (பிறப்பு: சூன் 15 1941) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். பத்திரிகை நிருபரான இவர் பாவலர் திருக்குறள் மணியன் எனும் புனைப்பெயரில் எழுதிவருபவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1953 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக திருக்குறளில் கொண்ட பெரும் ஈடுபாட்டால் அதைப்பற்றி எழுதியும் பல மேடைகளில் பேசியும் வந்துள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
நூல்கள்
[தொகு]கட்டுரை
[தொகு]- "மலேசியாவில் அண்ணாவின் சொற்பொழிவுகள்"
- "எளிய இனிய இலக்கணம்"
- "ஒரு வள்ளலின் வரலாறு"
கவிதைகள்
[தொகு]- "எரிமலை"
- "பொன் மகனைப் பாடும் பூங்குயில்கள்"
பரிசில்களும், விருதுகளும்
[தொகு]- "திருக்குறள்" விருது (1954)
- "தமிழ் மறைக் காவலர்"
- "இலக்கியச் செல்வர்"
- "திருக்குறள் மணி"