உள்ளடக்கத்துக்குச் செல்

க. இரா. சிறீராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீதியரசர் க. இரா. சிறீராம் (JUSTICE KALPATHI RAJENDRAN SHRIRAM), கேரள மாநிலத்தின்கல்பாத்தி இராஜேந்திரன் என்பவருக்கு மும்பையில் பிறந்தார். சிறீராம் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகம் மற்றும் இளநிலை சட்டம் பயின்றவர். பின்னர் இலண்டன் மன்னர் கல்லூரியில் கடல்சார் சட்டங்களில் முதுநிலை பட்டம் பெற்றார்.

வழக்கறிஞர் தொழில் செய்வதற்கு, 3 சூலை 1989 அன்று மகாராட்டிரா & கோவா வழக்கறிஞர் சங்கத்தில் தன் பெயரைப் பதிவு செய்தார். பின் மூத்த வழக்கறிஞர் எஸ். வெங்கடேஸ்வரனிடம் இளைய வழக்கறிஞராக சேர்ந்தார். 1997ஆம் ஆண்டு முதல் தனியாக வழக்குரைஞர் தொழில் செய்யத் துவங்கினார். இவர் பன்னாட்டுக் கப்பல் போக்குவரத்து, பன்னாட்டு வணிகச் சட்டங்கள், நிறுவனச் சட்டம், சுங்கச் சட்டம், கடல்சார் காப்பீடு, துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றுதல்/இறக்குதல் போன்றவைகளில் ஏற்படும் சட்ட சிக்கல்களில் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடுவதில் வல்லவர்.

21 சூன் 2013 அன்ற பம்பாய் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக கே. ஆர். சிறீராம் நியமிக்கப்பட்டார். 2 மார்ச் 2016 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதியரசராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதியரசர் ஆர். சுவாமிநாதன் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்ததால், 11 சூலை 2024 அன்று நீதிபதிகள் தேர்வுக் குழு நீதியரசர் கே. ஆர். சிறீராமை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது.[1][2][3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இரா._சிறீராம்&oldid=4047605" இலிருந்து மீள்விக்கப்பட்டது