உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்லிமலை கொல்லிப்பாவை கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லிமலை கொல்லிப்பாவை கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். [1] இந்த அம்மன் எட்டு கைகளுடன் காட்சிதருவதால் எட்டுக்கையம்மன் என்றும் அழைக்கின்றனர். பூஞ்சோலை என்ற கிராமத்தில் இருந்து நடைபயணமாக சென்று இக்கோயிலுக்கு செல்ல வேண்டும்.

சொல்லிலக்கணம்

[தொகு]

கொல்லுகின்ற பாவை என்பதால் கொல்லிப்பாவை என்ற பெயர் வந்தது.

தலவரலாறு

[தொகு]

கொல்லிமலையில் தேவர்களும், மகரிசிகளும் தவமிருந்த போது அசுரர்களால் துன்பம் நேரிட்டதாகவும், அதை தடுக்க தேவரான விஷ்வகர்மா ஒரு பெண் சிலையைடச் செய்தார். அதற்கு உயிர் கொடுத்த தேவர்கள், அந்தப் பெண்ணின் வசீகரித்தில் மயங்கி வருகின்ற அரக்கர்களை அம்பிகை எட்டுகளைக் கொண்டு கொன்றாள். [2]

மூலவர்

[தொகு]

கொல்லிப்பாவை எட்டுக்கைகளுடன் காட்சிதருகிறார். எப்போதுமே சந்தனக்காப்பில் மட்டும் காட்சிதருகிறார். [3]

செல்லும் வழி

[தொகு]

நாமக்கலிருந்து கொல்லிமலை அறப்பள்ளீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில், பேருந்து நிறுத்ததிலிருந்து இரண்டு கிலோமீட்டர்கள் நடைபயணமாக செல்லவேண்டும்.

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "-தீமைகளைக் கொன்று நல்லவர்களைக் காக்கும் கொல்லிப்பாவை - சுகந்தன் - நக்கீரன் தளம் 01-07-09". Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2016-07-11.
  2. அருள்மிகு அரப்பள்ளீசர் கோயில் - தினமலர் கோயில்கள்
  3. "தீய சக்திகளை சாம்பலாக்கும் கொல்லிப்பாவை - தினகரன் :2013-12-11". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-11.

வெளி இணைப்புகள்

[தொகு]