கே. ஆர். டேவிட்
Appearance
கே. ஆர். டேவிட் | |
---|---|
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | கல்விப் பணிப்பாளர் , ஈழத்து எழுத்தாளர் |
கே. ஆர். டேவிட் ஈழத்து எழுத்தாளர் ஆவார். புதினம், குறும்புதினம், சிறுகதை, உருவகக்கதை, இலக்கிய, அரசியல் ஆய்வு எனப் பல்துறைகளில் எழுதி வருபவர்.
இலங்கை, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1966 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவரது “எழுதப்படாத வரலாறு” என்ற சிறுகதை தரம் எட்டு தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநூலில் இடம் பெற்றுள்ளது.[1] சாவகச்சேரி பிரதேச உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
விருதுகள்[தொகு]
- 2006–2008ஆம் ஆண்டுகளுக்குரிய கனக செந்தி கதா விருது
- 2011 இல் கலாபூஷணம் விருது
- 2013 இல் சிறந்த எழுத்தாளருக்கான இதழியல் விருது
- "மண்ணின் முனகல்" என்ற சிறுகதைத் தொகுதிக்கு 2013 ஆம் ஆண்டுக்கான நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருது கிடைத்தது.[1][2]
- 2013 இற்கான தமிழியல் விருது இவரது பாடுகள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 நாமக்கல் சின்னப்ப பாரதி இலக்கிய விருது பெறும் இலங்கை எழுத்தாளர், வீரகேசரி, அக்டோபர் 6, 2013
- ↑ சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: என். சங்கரய்யா தேர்வு, தினமணி, 13 சூலை 2013