உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணம்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணம்பள்ளி
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எ
635805
தொலைபேசிக் குறியீடு04171-
வாகனப் பதிவுTN-23
அருகில் உள்ள நகரம்வேலூர் / குடியாத்தம்
மக்களவைத் தொகுதிவேலூர்
தட்பவெட்பநிலைவெப்பம் (கோப்பென்)

கிருஷ்ணம்பள்ளி (Krishnampalli) இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் தாலுகா, மேல்பட்டி அஞ்சலின் கீழ் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் பேர்ணாம்பட்டிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மேல்பட்டி வழியாக அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் அதிகம் பேசப்படும் மொழி தெலுங்காகவும் இரண்டாவதாக அதிகம் பேசப்படும் மொழியாக தமிழும் உள்ளன.

கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது 1987-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இக்கிராமத்தில் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோயில் ஒன்று உள்ளது.

இக் கிராமமானது சில சிறிய மலைகளாலும், கிராமங்களாலும் சூழப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் வறட்சி காணப்பட்டாலும், இதன் முக்கிய வருவாய் ஆதாரம் விவசாயம் ஆகும். தற்போதைய தலைமுறையில் எழுத்தறிவு விகிதம் 90% க்கு மேல் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணம்பள்ளி&oldid=3946193" இலிருந்து மீள்விக்கப்பட்டது