காக்கைச் சிறகினிலே (இதழ்)
Appearance
காக்கைச் சிறகினிலே | |
---|---|
துறை | இலக்கியம் |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | வி. முத்தையா |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | வி. முத்தையா (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | திங்கள் இதழ் |
License | TNTAM/2012/43921 |
காக்கைச் சிறகினிலே என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் இலக்கியத் திங்கள் இதழ் ஆகும். இவ்விதழ் வி. முத்தையா என்பவரால் 2011 அக்டோபர் 1 ஆம் நாள் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இக்சா அரங்கில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.[1] முதல் மூன்று இதழ்கள் (2011 அக்டோபர், நவம்பர், திசம்பர்) மாதிரி இதழ்களாக வெளியிடப்பட்டன. 2012 சனவரி திங்கள் முதல் பதிவுபெற்ற இதழாக வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் குழு[தொகு]
இவ்விதழிற்கு வி. முத்தையா ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருக்கிறார்.[2] தொடக்க காலத்தில் வைகறை இதழாசிரியராக இருந்தார். அழகிய பெரியவன், இரா. எட்வின், ச. முகில்நிலா, ச. மேகனா ஆகியோர் ஆசிரியர் குழுவில்[3] தொடக்க கால்லத்தில் இருந்தனர்; அக்குழு அவ்வவ்பொழுது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
2014 ஆகத்து : இறக்கை 3, இறகு 8[தொகு]
வ.எண் | தலைப்பு | வடிவம் | பொருள் | படைப்பாளர் | பக்கம் |
01 | அரசை வழிநடத்துவது யார்? | கட்டுரை | தலையங்கம் | 1 | |
02 | சிறகுக்குள்ளே… | பட்டியல் | உள்ளடக்கம் | 2 | |
03 | ஆத்தங்கரை | சிறுகதை | இலக்கியம் | மதுரை சரவணன் | 3 |
04 | கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒளவை வழிபாடும் ஒளவையாரம்மன் கோயில்களும் | கட்டுரை | நாட்டார் வழக்காற்றியல் - தொன்மம் | சு. இராமசுப்பிரமணியன் | 7 |
05 | தலைமுறையை அழிக்கும் ஆட்டிசம் | கட்டுரை | உளவியல் மருத்துவம் | கோ. சுமித்ரா இங்கர்சால் | 12 |
06 | இன்னும் இருக்கும் வேர்கள் | கவிதை | இலக்கியம் | ஈரோடு தமிழன்பன் | 15 |
07 | இந்தித் திணிப்பு: எதிர்ப்பும் வெறுப்பும் | கட்டுரை | அரசியல் | எஸ்.கிருஷ்ணமூர்த்தி | 16 |
08 | துரும்பர் | கட்டுரை | சமூகவியல் | ஆ. சிவசுப்பிரமணியன் | 18 |
09 | மருத நிலத்தின் வரைவுகடாதல் | கவிதை | இலக்கியம் | பூர்ணா | 23 |
10 | பட்டணம் பார்க்கப்போன சிவலை நாய் | சிறுகதை | நாட்டார் வழக்காற்றியல் – ஈழத்து நாட்டார் கதை | முகிலன் | 24 |
11 | ஆழியாள் கவிதைகள்: மேகத்துக்குள் இயங்கும் சூரியன் | கட்டுரை | நூல் திறனாய்வு | க. பஞ்சாங்கம் | 29 |
12 | ஜெயகாந்தன் 80 | கட்டுரை | விழா செய்தி | ஏகன் | 32 |
13 | ஒரு நகரம், ஒரு தாய், நான்கு பிள்ளைகள் | கட்டுரை | திரைப்படம் | எஸ். இளங்கோ | 37 |
14 | வேர்பிடித்த விளைநிலங்கள் -10: இன்றும் எனக்கு உணவூட்ட ஆசைப்படும் அத்தை | தொடர் கட்டுரை | தன் வரலாறு | ஜோ டி குரூஸ் | 40 |
15 | 1, 2 | கவிதை | இலக்கியம் | கோசின்ரா | 46 |
16 | போதும்… திருவாளர் கண்ணப்ப முதலியார்! | கட்டுரை | தன் வரலாறு | இன்குலாப் | 48 |
17 | The Gypsy Goddess : காற்றில் கலந்த கதறல் ஒலி | கட்டுரை | நூல் திறனாய்வு | காசி ஆனந்தன் | 52 |
18 | தன்னையே பலியிட்ட நவகண்ட சிற்பங்கள் | கட்டுரை | தொல்பொருளியல் | வைகை அனிஷ் | 55 |
19 | தண்ணீர் தீவு | சிறுகதை | இலக்கியம் | க.மு.அகமது | 58 |
20 | சரிந்த மனிதம் | கவிதை | இலக்கியம் | துரை.நந்தகுமார் | 62 |
21 | அந்திம ஆறுதல் ஆணாதிக்கம் |
கவிதை | இலக்கியம் | அ. பிரமநாதன் | 63 |
22 | மடல் திறப்பு | கடிதம் | வாசகர் கடிதம் | 64 |
சான்றடைவு[தொகு]
- ↑ காக்கைச் சிறகினிலே இதழ் வெளியீட்டுவிழா அழைப்பிதழ்
- ↑ சிற்றிதழ் அறிமுகம்: ‘காக்கைச் சிறகினிலே’ - 100-வது இதழ்
- ↑ காக்கைச் சிறகினிலே, இறக்கை:1 இறகு:1, அக்டோபர் 2011, பக்.01