கடலைப்பருப்பு
Appearance
கடலைப் பருப்பு என்பது கொண்டைக் கடலையிலிருந்து உருவாக்கப்படும் உணவுப்பொருளாகும்.இது மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.இதை ஊற வைத்து அரைத்து வடை சுடுவார்கள். சட்னி,துவையல் செய்யப் பயன்படும்.மேலும் பல வகையான கூட்டுகளிலும் பயன்படுத்தப்படும். இதை வறுத்த பின் வறுகடலை அல்லது பொட்டுக் கடலை எனவும் வழங்குவர். வறுகடலையைச் சட்னியிலும் குருமாவிலும் பயன்படுத்துவர்.இது சத்தான உணவுப்பொருள்.