ஏ. ஜி. எம். சதக்கா
Appearance
ஏ. ஜி. எம். சதக்கா | |
---|---|
இறப்பு | ஆகத்து 20, 2011 ஏறாவூர் |
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
ஏ. ஜி. எம். சதக்கா (இறப்பு: ஆகத்து 20, 2011) இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமாவார்.
வாழைச்சேனையைச் சேர்ந்த ஸதக்கா பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர். மூன்று பிள்ளைகளின் தந்தை. யாத்ரா சஞ்சிகையின் துணையாசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.
எழுதிய நூல்கள்
[தொகு]- இமைக்குள் ஓர் இதயம், கவிதைத் தொகுதி
- போர்க்காலப் பாடல்கள், கவிதைத் தொகுதி
மறைவு
[தொகு]ஏறாவூர், சந்திவெளி கிரிமுட்டிபாம் பகுதியில் 2011, ஆகத்து 20 இல் இராணுவ வாகனத் தொடர் அணிக்கு இடமளித்து பாதையை விட்டு ஓரமாகும் சந்தர்ப்பத்தில் அவர் பயணித்த ஈருருளி எதிரே உள்ள மரத்தில் மோதுண்டதில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இலக்கியவாதி சதக்கா விபத்தில் மரணம் பரணிடப்பட்டது 2013-10-09 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஆகத்து 22, 2011