உழுத்தம் சுவாலை
Appearance
உழுத்தம் சுவாலை எனப்படுவது ஈழத்து உணவுகளில் ஒன்றாக இடம்பெறும் ஒரு இனிப்புச் சிற்றுண்டி ஆகும். இந்த சிற்றுண்டி ஆனது காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கோ அல்லது வேலைக்கு போகும் குடும்ப உறுப்பினர்களுக்காக அதி உச்ச புரதச் சத்துக்களை கொண்ட உணவாகும். அதே வேளை குறிகிய நேரத்தில் தயாரிக்க கூடியதாகவும் இது அமைந்துள்ளது.
செய்முறை[தொகு]
உழுத்தம்மா, அரிசிமா, சீனி, போன்றவற்றை கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைப்பர் அல்லது பிசைவார். பின்னர் இடியப்ப உரலினால் இடியப்ப தட்டில் பிழிந்து அவற்றை ஆவியில் அவித்து எடுப்பர். பெரும்பாலான ஈழத் தமிழர்கள் விரும்பி உண்ணும் உணவாகும்.