இராம்நாத் கோயங்கா விருது (இலக்கியம்)
Appearance
This article கொண்டுள்ள மேற்கோள்கள் / சான்றுகள் அதிகமாக முதல்நிலை மூலங்களில் தங்கியுள்ளன.. (நவம்பர் 2024) |
ராம்நாத் கோயங்கா இலக்கிய விருது | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | சிறந்த இலக்கிய நூல்களுக்கு |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் |
முதலில் வழங்கப்பட்டது | 2023 |
இணையதளம் | rngfoundation.com |
இலக்கியத்திற்கான இராம்நாத் கோயங்கா விருது அல்லது ராம்நாத் கோயங்கா சாகித்ய சம்மான் (Ramnath Goenka Sahithya Samman) இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இலக்கிய விருது ஆகும். இவ்விருது தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திப் பத்திரிக்கைகளின் நிறுவனத் தலைவரான ராம்நாத் கோயங்கா நினைவு அறக்கட்டளை மூலம் செப்டம்பர் 2023ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இந்த விருது ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.[1]
2023ல் விருது பெற்றவர்கள்
[தொகு]- பெருமாள் முருகன் - இலக்கியம் - 2 இலட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்
- அனிருத் கனிசெட்டி - சிறந்த புனைகதை அல்லாத வரலாற்று நூலான லார்ட்ஸ் ஆஃப் தி டெக்கான்:சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை (Lords of the Deccan: Southern India from the Chalukyas to the Cholas) - 1 இலட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்
- தேவிகா ரேகா - சிறந்த புனைகதை நூலான குவாட்டர் லைப் (Quarterlife)
- நீரஜ் சௌத்திரி - புனை அல்லாத நூல்
- ஐஸ்வரியா ஜா - புனைகதை நூல் -The Scent of Fallen Stars
- ரஸ்கின் பாண்ட் - இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர்