ஆலய மணி (சிற்றிதழ்)
Appearance
ஆலய மணி இலங்கை வடமாகாணம் யாழ்ப்பாணம் நல்லூர் எனுமிடத்திலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
- புலவர் ஈழத்துச் சிவானந்தன்
உள்ளடக்கம்[தொகு]
இவ்விதழ் இலங்கையில் இந்து சமய ஆலயங்கள் பற்றி விரிவான விளக்கம் வழங்கும் ஒரு இதழாகும். இந்து சமய கோட்பாடுகள் குறித்த விளக்கம் வழங்கும் ஒரு இதழாகவும் காணப்பட்டது. இவ்விதழில் உண்மை விளக்கம் எனும் தலைப்பில் திருக்குறள் பற்றி முதுபெரும் தமிழறிஞர் வித்துவான் பொன்.அ. கணகசபை அவர்களால் எழுதப்பட்ட திருக்குறள் விளக்கவுரை அநேகரின் வரவேற்பினைப் பெற்றிருந்தது.