ஆலமரத்துப்பட்டி (விருதுநகர்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆலமரத்துப்பட்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°28′25″N 77°50′21″E / 9.473709°N 77.839175°E | |
நாடு | இந்தியா |
அரசு | |
• ஊராட்சி மன்ற தலைவர் | ப மாகலிங்கம் |
Languages | |
• Official | தமிழ்l |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 626130 |
Telephone code | 91 4562 |
வாகனப் பதிவு | TN 67 |
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலமரத்துப்பட்டி கிராமம் திருத்தங்கலிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் சிவகாசியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஆலமரத்துப்பட்டியைச் சுற்றி செங்கமலப்பட்டி, நாரணாபுரம், செல்லையநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களும், திருத்தங்கல், சிவகாசி ஆகிய நகரங்களும் உள்ளன.
இக்கிராமத்தில் மிகப் பழமையான அரசமரமும், காளி கோவிலும், கிருட்டிணர் கோவிலும் அமைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் திருவிழா மிக விமரிசையாக இக்கிராமத்தில் நடைபெறும். திருவிழாவின் போது நாராயணர் மற்றும் நாச்சியார் சுவாமி சிலைகள், திருத்தங்கலிலிருந்து பல்லக்கில் கொண்டு வரப்பட்டு பூசை செய்யப்படும். இப்பல்லக்கை கிராம மக்களே சுமந்து வருவர். இக்கிராமத்தில் நுழையும் இடத்தில் முக்கு பிள்ளையார் கோயில் உள்ளது. புதிய முயற்சிகளில், புதிய வேலைகளில் ஈடுபடும் போது முக்கு பிள்ளையாரை வணங்கிச் செல்வர்.
முக்கிய நபர்கள்[தொகு]
இக்கிராமத்தில் முதலில் குடியேறிய நாகம்மா நாயுடு குடும்பத்தினா்,மற்றவர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். சனார்த்தனன், சங்கரப்பன் மற்றும் சின்னையன் ஆகியோா் சமூக நல்லிணக்கதிற்கு பாடுபட்டனர். இக்கிராமத்திலிருந்து முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராக திரு.பாலகங்காதரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திர போராட்டத்தில் இக் கிராமத்திலிருந்து பலர் கலந்து கொண்டு, பெல்லாரி சிறையில் 2 ஆண்டுகள் வரை தண்டனைப் பெற்றனர்.