உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதிலட்சுமி சிவகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிலட்சுமி சிவகுமார்
பிறப்புஆதிலட்சுமி
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

ஆதிலட்சுமி சிவகுமார் (Athilakshmi Sivakumar) ஈழத்துப் பெண் எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார். வன்னி மண்ணிலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப்பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், விமர்சனங்கள், நாடகங்கள் என்று பல தளங்கிலும் ஒரு சமூகவிடுதலை நோக்கிய எழுத்துப் போராளியாக இயங்கிக் கொண்டிருந்தவர். 1990இலிருந்து புலிகளின் குரல் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர். தற்சமயம் புலம்பெயர்ந்து சுவிற்சலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

எழுத்துலக வாழ்வு

[தொகு]

1982-இலிருந்து எழுதிவரும் இவர் மே 20, 1982இல் 'உரிமையில்லா உறவுகள்' என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக ஆதிலட்சுமி இராசையாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். இவரது படைப்புகள் எரிமலை, வெளிச்சம், ஈழநாதம், சுட்டும் விழி, சரிநிகர், ஞானம், வைகறை, வெள்ளிமலை, கவிதை, நாற்று, யாத்ரா போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன. இன்றும் பல ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.[1][2][3][4][5][6]

வெளிவந்த நூல்கள்

[தொகு]
  • புயலை எதிர்க்கும் பூக்கள் (1990, சிறுகதைத்தொகுப்பு)
  • என் கவிதை (2000, கவிதைத்தொகுப்பு)
  • மனிதர்கள் (2006, கிளிநொச்சி, சிறுகதைத்தொகுப்பு)
  • புள்ளிகள் கரைந்த பொழுது (2018, நாவல்)[7][8]

பாடல்கள்/இறுவெட்டுகள்

[தொகு]

2007 வரை இவர் 13 பாடல்கள் எழுதியுள்ளார்.[9] இவற்றுள் சில பாடல்கள் அல்லது பாடல்கள் இடம்பெற்ற இறுவெட்டுக்களை இங்கே குறிப்பிடலாம்:

  • வானம் தொடும் தூரம்[10]
  • கடற்கரும்புலிகள் பாகம் 07[11]
  • தேசத்தின் புயல்கள் பாகம் 04
  • புதுயுகம் ஒன்று படைத்திட வேண்டும் (உதயம்)
  • ஈழம் மலரப்போகுது (உதயம்)
  • விழிமடல் மூடித் துயில்கின்ற வீரரின்…
  • கீதம் இசைத்த குயில் இவர் கீழ்வானம் எழுந்த கதிர்…

இவரது கதைகளிலிருந்து உருவான சில குறும்படங்கள்

[தொகு]
  • வேலி (இயக்கம்: நிமலா, தயாரிப்பு: தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.)
  • உண்மை (இயக்கம்: ரகுபாப், நிதர்சனம், தமிழீழம்)

பரிசுகள்/விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_2000.09.17_(201)
  2. http://noolaham.net/project/117/11656/11656.pdf
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-12. Retrieved 2015-03-05.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-12. Retrieved 2015-03-05.
  5. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_2004.10[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-03-05.
  7. ஈழப் போர் இலக்கியம்- புள்ளிகள் கரைந்தபொழுது – நாவல் வெளியீட்டு நிகழ்வு, அதிரன், http://eelamnews.co.uk, Jul 8, 2018
  8. http://aavanaham.org
  9. "எரிமலை (ஜனவரி 2008)". எரிமலை. January 01, 2008. https://thadam.eu/index.php/node/89. 
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-27. Retrieved 2015-03-04.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-27. Retrieved 2015-03-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிலட்சுமி_சிவகுமார்&oldid=4169933" இலிருந்து மீள்விக்கப்பட்டது