அரியலூர் தொடருந்து விபத்து
அரியலூர் இரயில் விபத்து என்பது இந்தியாவில் நடந்த தொடருந்து விபத்தாகும்.[1]
காலம்[தொகு]
1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னையிலிருந்து 13 பெட்டிகளுடன் தூத்துக்குடி தொடருந்து அதன் பயணத்தைத் துவக்கியது. விருத்தாச்சலம் சந்திப்பில், சேலம் செல்லும் பெட்டி ஒன்றைத் தவிர்த்து 12 பெட்டிகளுடன் பயணத்தைத் தொடர்ந்தது.[2] அப்போது கடும் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அரியலூர் - கல்லகம் தொடருந்து நிலையங்களுக்கிடையே நடந்த விபத்து ஆகும்.[3]
விபத்து[தொகு]
அரியலூர் அருகில் உள்ள மருதையாற்றில் மழை வெள்ளம் காரணமாக இரு கரைகளும் தெரியாதபடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 5.30 மணி என்பதால் தண்ணீரின் அளவுபற்றி நீராவி எஞ்சின் ஓட்டுநருக்கு அறிவிப்பு இல்லை. ஆகையால் இந்த விபத்து நடந்தது.
உயிரிழப்பு[தொகு]
இந்த விபத்தின் காரணமாக தொடருந்து எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருந்த பல பெட்டிகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் 142 பயணிகள் மரணமடைந்தனர். 110 பயணிகள் காயமடைந்தனர் மற்றும் 200 பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.[4]
பதவி விலகல்[தொகு]
இந்த விபத்தின் காரணமாக அப்போதைய இரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை விட்டு விலகினார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அரியலூர் ரயில் விபத்து
- ↑ Kumar, Virendra. Committees And Commissions In India Volume 12 : 1974. Concept Publishing Company, 1993, p. 285.
- ↑ ரயில் விபத்து 1956: கால வெள்ளத்தில் ஒரு பயணம்
- ↑ "A major train disaster in Tamil Nadu shares the trauma she passed through, all of 57 years later". The Hindu (March 02, 2014)
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-06. பார்க்கப்பட்ட நாள் 2014-03-07.