அரிப்புப் பாலம்
அரிப்புப் பாலம் | |
---|---|
போக்குவரத்து | பி403 நெடுஞ்சாலையில் மோட்டார் வண்டிகள் |
தாண்டுவது | அருவி ஆறு |
இடம் | அரிப்பு, மன்னார் மாவட்டம் |
மொத்த நீளம் | 258 m (846 அடி) |
அகலம் | 7.35 m (24 அடி) |
அமைவு | 8°48′14″N 79°57′02″E / 8.8038°N 79.9506°E |
அரிப்புப் பாலம் (Arippu Bridge) அல்லது தள்ளாடி-அரிப்புப் பாலம் என்பது, வடமேற்கு இலங்கையில் அருவி ஆற்றுக்குக் குறுக்கே அமைந்துள்ள சாலைப் பாலம் ஆகும். இது 2011 அக்டோபர் 16 ஆம் தேதி முறைப்படி திறந்துவைக்கப்பட்டது.[1]
இப்பாலம் 258 மீட்டர் (846 அடி) நீளமும் 7.35 மீட்டர் (24 அடி) அகலமும் கொண்டது.[2] 540 மில்லியன் இலங்கை ரூபா (US$4.9 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்ட இப்பாலக் கட்டுமானத்துக்குப் பிரித்தானிய அரசின் உருக்குப் பாலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இலகு கடன் வசதியூடாக நிதி அளிக்கப்பட்டது.[2] அரிப்புப் பாலம், மன்னாரையும் புத்தளத்தையும் இணைக்கும் பி403 சாலையின் ஒரு பகுதியாகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Thallady-Arippu bridge opened". Daily News (Sri Lanka). 18 October 2011 இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111020201958/http://www.dailynews.lk/2011/10/18/news11.asp.
- ↑ 2.0 2.1 "Arippu Bridge declared opened by Basil Rajapaksa – 16 October 2011". Northern Provincial Council. 18 October 2011.