அந்தி இளங்கீரனார்
Appearance
அந்தி இளங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயரில் ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது.
பாடல்
[தொகு]அகம் 71 பாலை
புலவர் பெயரின் விளக்கம்
[தொகு]இவரது இயற்பெயர் இளங்கீரன். இவர் கதிரவன் மறையும் அந்தி வேளையை 'பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை' என்று சிறப்பித்துள்ளமையால்[1] இவருக்கு 'அந்தி' அன்னும் அடைமொழி வழங்கப்பட்டுள்ளது.
பாடல் தரும் செய்தி
[தொகு]தலைவன் பிரிந்திருந்தபோது தலைவி தன் வருத்தத்தைத் தோழிக்குப் புலப்படுத்துகிறாள்.
உவமை நலன்கள்
[தொகு]- செல்வம் குறைந்தோர் பயனின்மையில் நிறைந்தோரைத் தேடும் 'நயனில் மாக்கள்'
- நயனில் மாக்களைப் போல வண்டினம் சுனைப்பூவை விட்டுவிட்டுச் சினைப்பூவை நாடல்
- வானம் வெந்து ஆறு ஓடுவதுபோல அந்தி பூத்தல்
- 'நிழல் கால் மண்டிலம்' என்னும் கண்ணாடியில் என் உள்ளம் ஊதும் பெருமூச்சுக் காற்று படிந்து மங்குவது போல என் மதுகை(உள்ளத்தின் உரம்) மாயந்துகொண்டிருக்கிறது போலும்
- என் உயிர் மரத்திலிருந்து புள் பறப்பது போல் பறந்துவிடும்