உள்ளடக்கத்துக்குச் செல்

அங்குசெட்டிப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்குசெட்டிப்பாளையம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
607106

அங்குசெட்டிபாளையம் (Anguchettipalayam), என்பது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும்.[1] அங்குசெட்டிபாளையம் பண்ருட்டியில் இருந்து மேற்கு திசையில் 3 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழும் பசுமையான கிராமம். இங்கு அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. அதன் அருகாமையில் ஊராட்சி மன்ற அலுவலகமும் உள்ளது. இங்கு பேருந்து நிறுத்தம் அருகே காந்தி சிலையின் உருவம் அமைந்துள்ளது. அங்குசெட்டிபளையம் கிராமம் சேலம் செல்லும் வழியில் பிரதான சாலையில் அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கடலூரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், பண்ருட்டியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 190 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

[தொகு]

இந்த கிராமத்தில் 1978 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 8313 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4255 (51.2 %) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4058 என்றும் உள்ளது. எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் 63.8 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்குசெட்டிப்பாளையம்&oldid=4099960" இலிருந்து மீள்விக்கப்பட்டது