சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
சந்திரிக்கா குமாரதுங்க | |
---|---|
![]() | |
இலங்கையின் 5வது சனாதிபதி | |
பதவியில் நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005 | |
முன்னையவர் | டிங்கிரி பண்டா விஜயதுங்கா |
பின்னவர் | மகிந்த ராஜபக்ச |
இலங்கையின் 14வது பிரதமர் | |
பதவியில் ஆகஸ்ட் 19, 1994 – நவம்பர் 14, 1994 | |
முன்னையவர் | ரணில் விக்கிரமசிங்க |
பின்னவர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 29, 1945 இலங்கை |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
துணைவர் | காலஞ்சென்ற விஜய குமாரதுங்க |
கையெழுத்து | ![]() |
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பிறப்பு ஜூன் 29, 1945) இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.
இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்காவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சந்திரிக்கா பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் தொடர்பான பட்டபடிப்பை முடித்தவர். இவர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் உள்ளவராவார். இலங்கை திரும்பிய சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1972-1976 காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குநராக பணியாற்றினார். 1974 இ.சு.க. பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1976 - 1977 காலப்பகுதியில், கொத்தணிப் பண்ணைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.1976- 1979 காலப்பகுதியில், உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு விசேட ஆலோசகராக பணியாற்றினார்.
1978 இல் சந்திரிக்கா இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவை மணந்தார். குமாரணதுங்க 1988இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். 1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சனாதிபதியாக பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார்.
1999 ஒக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னதாகவே சந்திரிகா தேர்தலை நடத்த திட்டமிட்டார்.[1].டிசம்பர் 18 1999 இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.[2]. அங்கீகரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.[3]. அத்தேர்தலில் சந்திரிக்க ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சனாதிபதியாக பதவியேற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பி.பி.சி. செய்திகள்
- ↑ பி.பி.சி. செய்திகள் கொலை முயற்சி
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ இரண்டாவது முறை சனாதிபதியாகுதல்
சார்புடைய கட்டுரைகள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- பி.பி.சி.யில்
- தேடல் சந்திரிக்கா பற்றிய பி.பி.சி. செய்தி தேடல்கள்
- இலங்கை பாதுகாப்பு அமைச்சு
- இலங்கை அரச தளத்தி சந்திரிக்கா பற்றிய பக்கம் பரணிடப்பட்டது 2004-06-03 at the வந்தவழி இயந்திரம்
- இலங்கையின் சனாதிபதிகள்
- சிங்கள அரசியல்வாதிகள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- பண்டாரநாயக்கா குடும்பம்
- இலங்கைப் பிரதமர்கள்
- 1945 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- பெண் அரசுத் தலைவர்கள்
- இலங்கைப் பெண் அரசியல்வாதிகள்
- இலங்கையின் நிதி அமைச்சர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- பெண் பிரதமர்கள்