உள்ளடக்கத்துக்குச் செல்

கல்கணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கல்ஹானர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்கணர் (Kalhana, Kalhan, கல்ஹானர்) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீர பண்டிதர் ஆவார். கி பி 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கல்ஹானர், 1148 -1149 கால கட்டத்தில் சமசுகிருத மொழியில் எழுதிய இராஜதரங்கிணி (மன்னர்களின் ஆறு) எனும் கவிதை நூல், 3449 செய்யுட்களுடனும், எட்டு தரங்கங்கள் (தரங்கம் எனில் அலை) எனும் அத்தியாயங்களுடன் கூடியது.

சமசுகிருத கவிதை வடிவில் உள்ள வரலாற்று நூலான இராஜதரங்கிணி ஜம்மு காஷ்மீரின் 12ஆம் நூற்றாண்டின் வரலாற்றை கூறுவதுடன், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றையும் விவரிக்கிறது.[1]

வாழ்க்கை

[தொகு]

கல்ஹானர், லோகரா வம்ச காஷ்மீர் மன்னர் ஹர்சர் அமைச்சரவையில் பணியாற்றிய சன்பக்கா என்பவரின் மகனாவர். காஷ்மீர் பண்டிதர் குலத்தில் பிறந்த கல்ஹானர் சமசுகிருத மொழி அறிஞரும், கவிஞரும் ஆவார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stein, Vol. 1, p. 15.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
  • Stein, Mark Aurel (1989) [1900]. Kalhana's Rajatarangini: a chronicle of the kings of Kasmir, Volume 1 (Reprinted ed.). Motilal Banarsidass. ISBN 978-81-208-0369-5. Retrieved 2011-07-11.
  • Stein, Mark Aurel (1989) [1900]. Kalhana's Rajatarangini: a chronicle of the kings of Kasmir, Volume 2 (Reprinted ed.). Motilal Banarsidass. ISBN 978-81-208-0370-1. Retrieved 2011-07-10.
  • Robin Donkin (1998). "Beyond price: pearls and pearl-fishing: origins to the age of discoveries". Memoirs of the American Philosophical Society (American Philosophical Society) 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87169-224-5. https://books.google.com/books?id=leHFqMQ9mw8C. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கணர்&oldid=3764891" இலிருந்து மீள்விக்கப்பட்டது